சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த யாழ். குடாநாடு!

262 0

யாழ். மாவட்டத்திற்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 11 ஆயிரத்து 582 சுற்றுலா பயணிகள் யாழ். மாவட்டத்திற்கு விஐயம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், 2014 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 580 சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செய்துள்ளனர்.

மேலும், 2016 ஆம் ஆண்டில் அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.