நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பில் தம்மிக்க பெரேரா வெளியிட்டுள்ள தகவல்

187 0

அரசியல் தமக்கு கசந்து விட்டதாக பிரபல தொழில் அதிபரும், கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

தெற்கின் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் குறித்து தாம் விரக்தி அடைந்துள்ளதாகவும், விரைவில் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் முரண்பாடுகள் காரணமாக பதவி விலகவில்லை எனவும், அரசியல் பிடிக்கவில்லை என்பதனால் பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.