குழிக்குள் குட்டியுடன் வீழ்த்த தாய் யானை உயிரிழப்பு

96 0

மஹாகும்புக்கடவல பகுதியில் காட்டு யானையொன்று தனது குட்டியுடன் குழியொன்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் குட்டி உயிருடன் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டுயானை மூன்று நாட்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் உணவு தேடி கிராமத்திற்குள் உட்புகுந்துள்ள வேளை குழிக்குள் வீழ்ந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியரினால் 21 ஆம் திகதி பிரேத பரிசோதனை இடம்பெற உள்ள நிலையில் குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டு அநுராதபுரம் யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த யானை 25 வயது மதிக்கத்தக்கது எனவும் குட்டி யானை 4 மாத வயதை உடையது எனவும் வனஜீவரிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.