அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஜீலரத்ன தேரருக்கு பிடியாணை

114 0

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கருவே ஜீலரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றை மையப்படுத்திய வழக்கில் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகாத அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கருவே ஜீலரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைதுசெய்யுமாறே கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.