கோத்தபாய ராஜபக்ச பதவி விலகிவிட்டார்-முகமட் நசீட்

193 0

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டார் என மாலைதீவின் சபாநாயகர் முகதட் நசீட் தெரிவித்துள்ளார் .

டுவிட்டர் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுகோத்தபாய ராஜபக்ச பதவி விலகிவிட்டார்,இலங்கை இனி முன்னோக்கி நகரலாம் என நான் கருதுகின்றேன்.

இலங்கையில் தொடர்ந்தும் இருந்திருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் காரணமாக ஜனாதிபதி பதவி விலகியிருக்கமாட்டார் என நான் கருதுகின்றேன்.

மாலைதீவு அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான நடவடிக்கையை நான் பாராட்டுகின்றேன், இலங்கை மக்களிற்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.