இலங்கை ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்துள்ளார்.
இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
சிங்கப்பூருக்கு கோத்தபாய ராஜபக்ச சென்றடைந்த பின்னர் மின்னஞ்சல் மூலம் கிடைத்துள்ள இராஜினாமா கடிதத்தை அந்த வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் நிலவுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அனுப்பிய கடிதம் சட்டமாதிபரின் ஆலோசனைக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.