ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

115 0

ஜூலை 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் பொது விடுமுறை அல்ல எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் திடீர் மரணம் காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.