யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

