ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
நேற்று முன்தினம் இருந்து இவ்வாறு கடும் பனி மற்றும் பணி சரிவு என்பன ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் நேற்றைய தினம் உயிரிழந்தனர்.
அதுபோல் வடக்கு பாகிஸ்தானின் ஏற்பட்ட சரவில் 13 பேர் உயிரிழந்தனர்.
பல வீடுகளும் சிற்றுர்திகளும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிக்கின்றன.
இதனிடையே ஆப்கான் தலைநகர் காபுலிலும் பனிப்பாறை சரிவினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.