சட்டவிரோதமாக பெற்றோலைப் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தகர் கைது

132 0

சட்டவிரோதமான முறையில் பெற்றோலைப் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று (30) மாலை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அவரிடமிருந்து ஒரு தொகை பெற்றோலும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் கீழ் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது காத்தான்குடி பிரதேச வர்த்தக நிலையமொன்றிலிருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செயயப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.