மட்டக்களப்பு வலையிறவு ஆற்றுக்குள் பாய்ந்த லொறி

130 0

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக லொறி வண்டி ஒன்று வீதியைவிட்டுவிலகி வலையிறவு ஆற்றில் வீழ்ந்த சம்பவம்  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் இரண்டு லொறிகள் ஒரே நேரத்தில் பயணித்த போது , ஒரு லொறியை மற்றய லெறியை முந்திச் செல்ல முற்பட்ட போது இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.

வீதியை விட்டு விலகி ஆற்றுகுள் குடைசாய்ந்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளை வாகனத்தின் சாரதியும் நடத்துனரும் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.