கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா – எதிர்வரும் 10ஆம் திகதி

400 0

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்குகொள்ள உள்ளனர்.

அன்றைய தினம் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதுடன் பொன்விழா முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினம் அங்கு கல்விபயிலும் அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாணவர்களின் வரவுகள் அனைத்தும் இந்த அடையாள அட்டை மூலம் டிஜிட்டல் இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் என கல்லூரி அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பொன்விழாவையொட்டி எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் மாபெரும் கல்விக் கண்காட்சி கல்லூரி வளவில் நடைபெற உள்ளது.

கண்காட்சியில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.