வவுனியாவில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்(காணொளி)

294 0

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்றிணைவோம், கைகொடுப்போம், போராடுவோம் என்ற தொனிப்பொருளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நல்லாட்சி அரசாங்கம் கல்வி, சுகாதாரத்தினை அழிப்பதாகவும், மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்றும் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் இன்றைய தினம், மருத்துவ பீட மாணவர்கள் ஒருங்கமைப்புச் செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்த மக்கள் கையெழுத்துப் போராட்டம் மற்றும் விழிப்புணர்வு என்பனவும் வவுனியாவில் இடம்பெற்றன.

கல்வி சுகாதாரம் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மாலபே சைட்டம் திருட்டுப் பட்டக்கடைக்கு எதிராக, பாடசாலைகளில் பணம் அறவிடுவதற்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக என பல்வேறு தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த கையெழுத்து வேட்கையில், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.