வீதியை கடக்க முற்றபட்ட இராணுவ சிப்பாய் வாகனம் மோதிப் பலி

186 0

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ சிப்பாய் மீது பிக்கப் வாகனம் மோதியதில் இராணுவ வீரர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவசிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பேருந்தில் மீண்டும் கடமைக்கு திரும்பிய போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சிப்பாயை மோதியதில் இராணுவசிப்பாய் 7 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டடதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் .

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.