21வது சட்டமூலத்திற்கு அனுமதி

138 0

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

21வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.