நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

350 0

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அப்பல்லோவின் நான்காவது மாடியில் உள்ள ‘எல்’ வார்டில் ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா இன்று அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வராக பதவி வகிக்கும் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.