கிளிநொச்சியில் இளைஞர் மாயம் ; பொலிஸில் முறைப்பாடு

112 0

கிளிநொச்சியில் தொழில் பயிச்சி  நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கிளிநொச்சிகனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார்,

மேற்படி இளைஞன் நேற்று முன்தினம் (16) அன்று காலை 07.00 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிச்சி  நிலையம் ஒன்றுக்கு சென்று இருந்த நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் , தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ் சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில் எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல் போயுள்ளார்.

எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளார். அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0741344699 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.