படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 பேர் நீர்கொழும்பு கடலில் கைது

310 0

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைதுசெய்துயு அம்பாறை பாணமை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த  கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவுஸ்திரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் சட்டவிரோதமாக இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைதுசெய்து கரைக்கு கொண்டுவந்து பாணமை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கடலில் இருந்து  படகை  வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்கள்  நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.