சசிகலா நியமனம் – விளக்கம் வேண்டும் – தேர்தல் ஆணையம் கோரிக்கை

233 0

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, சசிகலா புஷ்பா அளித்த முறைபாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது.

தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோதமான நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சசிகலா புஷ்பா அளித்த முறைப்பாட்டிற்கு விளக்கமளிக்குமாறு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.