கரையோரம் விடுவிப்பு

256 0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியின் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.ஸ்ரீமோகனன் ஆகியோர் குறித்த கரையோரப்பகுதியை மக்களிடம் கையளித்தனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் அளவுடைய பகுதியும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மக்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்க தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் குறித்த நிலங்கள் வழங்கப்பட்டன.