இன்றிரவு 8 மணிக்கு முன் ஜோன்ஸ்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

109 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடிடுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தற்போது வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இந்த உத்தரவு ; மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அலரி மாளிகை முன்பாக மைனா கோ கம, காலி முகத்திடல் அருகேயான கோட்டா கோ கம எனும் பெயர்களில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்ய, சி.ஐ.டி.யினர் முயற்சிக்கும் நிலையில், அதனை தடுத்து எழுத்தாணை ( ரிட்) ஒன்றை பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று இரவு மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.