ஜனாதிபதி விஷேட தொலைபேசி உரையாடலில்

187 0

கட்டார் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பொருளாதாரம் மற்றும் முதலீடு போன்ற பல விடயங்களை மீளாய்வு செய்ய இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.