நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார்! சிங்கள அரசியல்வாதிகள் தயாரா..!

157 0

நாட்டின் கடன்களை தீர்க்க 53 பில்லியன் டொலர்களை புலம்பெயர் தமிழர்கள் வழங்க முன்வந்தால், வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுக்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பியுள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதாரத்திற்காக இடைக்கால சபையை நிறுவுவதற்கு சிங்கள தலைவர்கள் எவரும் தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.