369 பொருட்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சு அனுமதி

181 0

369 பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்தியாவசியமில்லாத 369 பொருட்கள் இறக்குமதி  செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள பொருந்தக்கூடிய வரிகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் இல்லாமல் அவற்றை இறக்குமதி செய்யலாம்.

இன்றைய தினம் நிதியமைச்சினால் இந்த அனுமதி வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 8 வீதமாக இருந்த வற் வரி இன்று முதல் 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery