ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசார் சுட்டுக்கொலை

272 0

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானிஸ்தானில் பர்யாப்மாகாணம் அல்மார் மாவட்டத்தில் சோதனை சாவடி உள்ளது. நேற்று அதன் அருகே 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பிணத்தைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட அனைவரும் போலீஸ்காரர்கள் என தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டவர்களில் தந்தை, 2 மகன்கள், 2 மருமகன்கள் மற்றும் 3பேர் உறவினர்கள் ஆவர்.அவர்களில் 4 பேர் போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்தனர். 4 பேர் போலீசாருக்கு உதவும் அதிகாரிகளாக இருந்தனர்.

இவர்களை உடன் பணி புரியும் போலீசாரரே இழுத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இச்சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் போலீசில் சரண் அடைந்துள்ளார். அவர் தலிபான் தீவிரவாதி என கருதப்படுகிறது.