பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வாவும் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயும் நியமனம்

124 0

இலங்கை இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படுவார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய இராணுவ தளபதிக்கான கடமைகளையும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நாளையதினமே பொறுப்பேற்கவுள்ளார்.

அத்தோடு பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நாளையதினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், இரு இராணுவ அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.