பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

239 0

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் 24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அதன்படி லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று நாளை புதன்கிழமை அவர் தனது புதிய பதவியை பொறுப்பேற்கிறார்.