சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

252 0

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும் சர்வதேசத்தின் உதவிகள் இலங்கைக்கு தேவைப்படுவது குறித்தும் கலந்துரையாடியிருந்த  பிரதமர் ரணில், சுவிட்சர்லாந்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தாம் இலங்கைக்கு எப்போதும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தூதுவர் டொமினிக், இவ்வாறான கலந்துரையாடல் அர்த்தபூர்வமானதாக அமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள தூதுவர் டொமினிக், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து சுவாரஸ்யமான கலந்துரையாடலை  முன்னெடுத்ததாகவும் அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும், இலங்கை மக்களுக்காக சுவிட்சர்லாந்து தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.