சிறுமி வன்புணர்வு செய்யப்படவில்லை – பிரேத பரிசோதனை

233 0

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி வன்புணர்வு செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை மூன்று தடயவியல் அதிகாரிகளில் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மூக்கு மற்றும் வாயின் ஊடாக தண்ணீர் மற்றும் சேறு சென்றதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.