கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நிவாரணம்.

515 0

ஜேர்மன் கல்விக்கழகத்தின் புகைப்படப்பிரிவின் நிதிப்பங்களிப்பில் 26.05.2022 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் மிகவறுமை நிலையில் வாழும் 92 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமைந்ததெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கும் வடமராட்சி கிழக்கு மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.