எரிபொருள் விநியோகம் செயலி சோதனை

191 0

எரிபொருள் விநியோகம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலி, தற்போது பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலியானது, இலங்கை காவல்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப திணைக்களம் என்பனவற்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுடன் நேரடி தரவுகளைப் பகிரவும் இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்