பேரறிவாளனை தொடர்ந்து 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்

158 0

பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதுபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில்உள்ளார். தற்போது பரோலில்விடுதலையாகி தூத்துக்குடிமாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பேரறிவாளனை போல் ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற தான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.