தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது!

144 0

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு தலையிடுவது என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.