ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

146 0

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றது ராஜபக்சக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ராஜபக்சக்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதே நோக்கம் என கூறினார்.

இக்கட்டான காலங்களில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை கருத்திற்கொண்டு நாட்டுக்கான சிறந்த தலைவரை அடையாளம் கண்டுகொள்ளம என தெரிவித்தார்.

மேலும் தற்போது நாட்டின் தலைவர்கள் செல்லாத காசாகிவிட்டார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.