ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் அமைச்சில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படுமென கட்சியினால் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.