வண்ணாத்திவில்லு பகுதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொலை

180 0

வண்ணாத்திவில்லு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிர்ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கள்ளக்கணவருடன் 4 வருடங்கள் வாழ்ந்து வந்ததாகவும், குறித்த பெண்ணிற்கும் கள்ளக்கணவருக்கும் இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக பெண் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இதன்பின்னர் ஒருகிழமைக்குப் பிறகு (24)செவ்வாய்கிழமை மாலை வீட்டிற்கு வந்தமையின் காரணத்தினால் ஆத்திரமடைந்த கள்ளக்கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வண்ணாத்திவில்லு மங்களபுர 15 ஆம் கட்டைப் பகுதியில் வசித்து வந்த 50 வயதுடைய லலிதா பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உயிரிழந்த பெண்ணின் கள்ளக் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.