இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பைப் பெற அமைச்சரவை அனுமதி

170 0

பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில், பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொற்றோலிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வலுச்சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.