முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

157 0

நாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் முதலாவது கிலோ மீற்றர் தூரத்திற்கான கட்டணத்தை 100 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளது  இதேவேளை, மேலதிக ஒவ்வொரு கிலோ மீற்றர் தூர கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்துறை சங்கம் மேலும் தெரிவித்துள்ளது .

மேலும், ;இன்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்  420 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளதாகவும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலின் விலை 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 445 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்துறை சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.