வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

285 0

வவுனியாவில் இ.போ.ச பேருந்து சாரதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்றில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.

சாரதிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதையும், வவுனியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் ஆதிக்கம் அதிகாமாக இருப்பதனையும் கண்டித்து நேற்றைய தினம் அரச பேருந்து ஊழியர்கள் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினம், யாழ் கோண்டாவில் பேருந்து நிலையத்தின் முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் உருவ பொம்மையினை தாங்கிய பேருந்து முன்பாக, தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரினை கையளித்துள்ளனர்.