மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

220 0

பிரிக்கப்படாத நாட்டுக்குள் நிரந்தர அரசியில் தீர்வை காண, மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதர மருத்துவ மனைக்கான புதிய வெளி நோயாளர் சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி தொகுதி திறப்பு விழா இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சி தலைவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நினைத்து பார்க்க முடியாத வகையில் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அதிகார பகிர்வின் பொருட்டு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே நாட்டின் நல்லிணக்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதன் போது கோரிக்கை விடுத்தார்.