தேசபந்து மீதான தாக்குதல்- மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

187 0

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன்  மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட  3 சந்தேகநபர்களின் விளக்கமறியலில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்ப்ட்டுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 12) இதற்காக உத்தரவிட்டது.  கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

குறித்த மூவரையும் அடையாள அணிவகுப்பிற்காக 19 ஆம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

அடையாள அணிவகுப்பு நேற்று (12) இடம்பெற இருந்த போதும், சாட்சியாளரான பொலிஸ் சாரதி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கொள்ளுபிட்டி பொலிஸார் அறிவித்த நிலையிலேயே இவ்வாறு வழக்கு 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.