அமரர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாக பஸ் தரிப்பிடம்

250 0
கிளிநொச்சி ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயலயநிர்வாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் இலங்கைச்செஞ்சிலுவைச்சங்கம் கிளிநொச்சி பிரஜைகள் குழு அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவர் வன்னிக்கல்வி பேரவை தலைவர் கிளி வைத்தியசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அங்கத்துவம் பெற்று தன்னுடைய சேவையாற்றிய சமுகப்பற்றாளர் பொன்.விநாயகமூர்த்தி அவர்கள் நினைவாகவும் யுத்தத்தின் போது உயிரிழந்த அவரது மகனுடைய நினைவாகவும் அவரது குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட குறித்தப் பேருந்துத் தரிப்பிடம் இன்று 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.