மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்

155 0

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதற்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய ஆகிய பொலிஸ் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து மேல் மாகாணம் முழுவதற்கும் குறித்த  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.

அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள “மைன கோ கம” போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக் களம் இரண்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த  மோதலில் காயமடைந்த 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.