அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம்!

245 0

அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றும் ஷிரால் லக்திலக்க இலங்கை மன்றக்கல்லூரியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி ஜயவர்தன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நிமல் ஏக்கநாயக்க நியமிக்கப்பட உள்ளார்.

ரவி ஜயவர்தனவை ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கும் யோசனையை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவே முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இலங்கை மன்றக்கல்லூரியின் தலைவராக பதவி வகித்து வரும் பேராசிரியர் கபில குணசேகர அந்த பதவியில் விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.