இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களால் தான் ஈர்க்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது,</p>
“இலங்கையின் மதிப்புமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன்,” என பதிவிட்டுள்ளாார்.
மேலும், 1989 இல் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வலிமை பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

