19ஆவது திருத்ததச் சட்டத்தினை மீண்டும் அமுலாக்கும் நோக்கம் இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் சுயாதீன அணியிரால் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்ததிற்கான முன்மொழிவை மையப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் பங்கேற்றிருந்த எம்.ஏ.சுமந்திரனால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்தபோது, 19ஆவது திருத்தச்சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்தும் முகமாக 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான யோசனையை திங்கட்கிழமையன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
குறுகிய காலத்தில் இந்தவிடயத்தினை முன்நகர்த்துவதாக இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான சுயாதீனமான அணியினர் சமர்ப்பித்துள்ள யோசனையை பின்பற்ற முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்ரூபவ் ஆளும் தரப்பினர்ரூபவ் தற்போதுவரையில் அது தமது கைகளுக்கு கிடைக்கவில்லை. அதுகிடைத்த பின்னரே தீர்மானத்தினைக் கூற முடியும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம்ரூபவ் வொஷிங்கடனில் இருந்து நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாடு திருப்பியதும் குறித்த 21ஆவது திருத்த முன்மொழிவு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும் என்று தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.<

