புலனாய்வு பிரிவினர் வடக்கில்………

252 0

நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் என்ற கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் மீது கண்காணிப்பை புலனாய்வு பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தி ஹிந்து செய்தித்தாளின் தகவல்படி சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக பிரதமர் காரியாலயம் செய்தி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகளின் தகவல்களின்பேரிலேயே இந்த தகவல் சுமந்திரனுக்கு அனுப்பப்பட்டதாகவும் தி ஹிந்து செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது.