கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சி-பந்துல குணவர்தன

248 0

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளை ஸ்ரீ வஜிராஸ்ரம விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஊடக சந்திப்புக்களை நடத்தியதாக குற்றம் சுமத்தி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, அவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மௌனிக்கச் செய்ய அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஓர் கட்டமாகவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிரிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அடிப்படையற்ற காரணங்கள் பயன்படுத்தப்பட்டதனைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை முடக்கவும் முயற்சிக்கப்படுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.