ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

391 0

றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால், ரம்புக்கனை – மாவனெல்லை, ரம்புக்கனை – கேகாலை மற்றும் ரம்புக்கன – குருநாகல் பிரதான வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டது.

இதன் காரணமாக 08 ரயில் பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.