காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடை இல்லை: வடக்கு, கிழக்கில் தொடரும் தடைகள்

149 0

அகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் மேலும், காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடையில்லை, வடக்கு கிழக்கில் தான் தடைக்கு மேல் தடைகள், தவறான தகவல்களைக் கொடுத்துத் தடையுத்தரவுகள் எடுக்கின்றனர் பொலிஸார்.

நீதிமன்ற உத்தரவால் அதனை மதித்து நடந்தோம் என குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.